மகளை துஷ்பிரயோகம் செய்ய குற்றச்சாட்டில் தந்தை கைது
பொத்துவில் பகுதியில் தனது 14 வயதுடைய மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்துவந்த தந்தையை இன்று (26) கைது செய்துள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.

பொத்துவில் பகுதியில் தனது 14 வயதுடைய மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்துவந்த தந்தையை இன்று (26) கைது செய்துள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் சிவில் பாதுகாப்பு உத்தியோகராக கடைமையாற்றி வரும் நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சிறுமியை கடந்த 3 வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்துவந்துள்ள நிலையில், தேசிய சிறுவர் பாதுகாப்பு சபையின் அவசர பிரிவான 1929 தொலைபேசி இலக்கத்துக்கு பாதிக்கப்பட்ட சிறுமி முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து பொத்துவில் பிரதேசத்தில் கடமையாற்றிவரும் 38 வயதுடைய தந்தை கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.