சாமர சம்பத் தொடர்பில் நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு
விசாரணைகள் தொடர்வதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முன்வைத்த கருத்துக்களை அடுத்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை, எதிர்வரும் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (01) உத்தரவிட்டுள்ளது.
விசாரணைகள் தொடர்வதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முன்வைத்த கருத்துக்களை அடுத்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டார்.
முன்னதாக 3 குற்றச்சாட்டுக்களின் கீழ் கடந்த மாதம் 27 ஆம் திகதி கைது செய்யப்பட்ட அவருக்கு இரண்டு குற்றச்சாட்டுக்களில் பிணை வழங்கப்பட்டது.
எனினும், மற்றுமொரு குற்றச்சாட்டு தொடர்பில் அவர் இன்று (01) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.