தனுஷ்க குணதிலக்க மீதான அவுஸ்திரேலிய வழக்கில் ஏற்பட்டுள்ள திருப்பம்

தனுஷ்க குணதிலகவுக்கு எதிராக அந்நாட்டு பொலிஸார் நியாயமற்ற முறையில் நடந்து கொண்டதாக சிட்னி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நவம்பர் 24, 2023 - 16:38
தனுஷ்க குணதிலக்க மீதான அவுஸ்திரேலிய வழக்கில் ஏற்பட்டுள்ள திருப்பம்

அவுஸ்திரேலியாவில் அந்நாட்டு பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருந்து இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், தனுஷ்க குணதிலகவுக்கு எதிராக அந்நாட்டு பொலிஸார் நியாயமற்ற முறையில் நடந்து கொண்டதாக சிட்னி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வழக்கு செலவு தொடர்பான வழக்கு இன்று (24) நீதிபதி சாரா ஹாகேட் முன்னிலையில் விசாரணைக்கு வந்த பொது, அங்கு அரசு தரப்பினால் ஒதுக்கப்பட்ட வழக்கில் குறிப்பிடத்தக்க சிக்கல்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இலங்கையில் பெண்களின் ஆயுட்காலம் தொடர்பில் வெளியான தகவல்!

இதன்படி தனுஷ்க குணதிலக்கவின் சட்டக் கட்டணத்தை அவரே பெற்றுக்கொள்ளும் வகையில் சான்றிதழ் வழங்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

டேட்டிங் செயலியின் ஊடாக அறிமுகமான அவுஸ்திரேலிய யுவதி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிட்னி பொலிஸாரால் தனுஷ்க குணதிலக கைது செய்யப்பட்டார்.

பின்னர் தடுப்புகாவலில் வைக்கப்பட்ட தனுஷ்க குணதிலக விசாரணையின் பின்னர், கடந்த செப்டெம்பர் மாதம் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டதை அடுத்து, இலங்கை திரும்பியிருந்தார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!