திருகோணமலையில் மின்சாரம் தாக்கி இரண்டு பேர் உயிரிழப்பு

திருகோணமலை, ஈச்சிலம்பற்று பகுதியில் மின்சாரம் தாக்கியதில் 29 மற்றும் 47 வயதான இருவர் உயிரிழந்துள்ளனர்.
திருகோணமலையில் மின்சாரம் தாக்கி இரண்டு பேர் உயிரிழப்பு

திருகோணமலை, ஈச்சிலம்பற்று பகுதியில் மின்சாரம் தாக்கியதில் 29 மற்றும் 47 வயதான இருவர் உயிரிழந்துள்ளனர்.
 
சூரிய நகரில் உள்ள காணி உரிமையாளரான 47 வயது நபர், வயலில் பொருத்தப்பட்டிருந்த யானைத் தடுப்பு மின் வேலியை சரி செய்த போது மின்சாரம் தாக்கியுள்ளது.  
 
இதனையடுத்து, அவரை காப்பாற்ற முற்பட்ட அவரது மகளின் கணவரான 27 வயதுடைய இளைஞனும் மின்சார தாக்கத்துக்கு இலக்காகி உள்ளார்.  
 
இருவரும் ஈச்சிலம்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

News21 இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

Add as a preferred source on Google
சமூக வலைத்தளங்களில் பின்தொடர