சூரியகந்த பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி மற்றும் கான்ஸ்டபிள் கைது

மான் கொல்லப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வுட்லர் தெரிவித்தார்.
சூரியகந்த பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி மற்றும் கான்ஸ்டபிள் கைது

கடமான் கொல்லப்பட்டதாக கூறப்படும் வழக்கில், சூரியகந்த பொலிஸ் நிலைய முன்னாள்  பொறுப்பதிகாரி (OIC) மற்றும்  கான்ஸ்டபிள் ஆகியோர் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவால் (CCIB) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மான் கொல்லப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வுட்லர் தெரிவித்தார்.

வனவிலங்கு கட்டளைச் சட்டத்தை மீறியதற்காக அவர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர்கள் நாளை (07) எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர், மேலும் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறனர்.

News21 இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

Add as a preferred source on Google
சமூக வலைத்தளங்களில் பின்தொடர