நேபாள வெள்ளத்தில் உயிரிழந்த ஏழு பேரின் சடலங்கள் இந்தியாவில் மீட்பு

இந்தப் பகுதிகள், நேபாளம் – இந்தியா எல்லையில் இருந்து சுமார் 70 கிலோமீற்றர் தொலைவில், வெள்ள நீர் செல்லும் திசையில் அமைந்துள்ளன.
நேபாள வெள்ளத்தில் உயிரிழந்த ஏழு பேரின் சடலங்கள் இந்தியாவில் மீட்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளத்தில் உயிரிழந்ததாக நம்பப்படும் ஏழு பேரின் சடலங்கள், எல்லையைத் தாண்டி இந்தியாவின் ஆறுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில், நேபாள நாட்டு எல்லையை ஒட்டி அமைந்துள்ள மகாராஜ்கஞ்ச் (Maharajganj) மாவட்டத்தில் அடையாளம் காணப்படாத நான்கு சடலங்களும், குஷிநகர் மாவட்டத்தில் மேலும் மூன்று சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்தப் பகுதிகள், நேபாளம் – இந்தியா எல்லையில் இருந்து சுமார் 70 கிலோமீற்றர் தொலைவில், வெள்ள நீர் செல்லும் திசையில் அமைந்துள்ளன.

நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டவர்களின் சடலங்களாக இவை இருக்கலாம் என இந்திய அதிகாரிகள் நம்புகின்றனர்.

மீட்கப்பட்ட சடலங்களை அடையாளம் காணும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, திபெத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் உயிரிழந்தவர்களின் உத்தியோகபூர்வ எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளதாக சீன அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் 554 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவில் இதுவரை 570க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், குறைந்தது 1,900 பேர் காணாமல் போயுள்ளனர் என அந்நாட்டு அதிகாரிகள் உத்தியோகபூர்வமான அறிவித்துள்ளனர். 

நேபாளம்–திபெத் எல்லைப் பகுதிகளில் காணாமல் போனவர்களைத் தேடும் மீட்புப் பணிகள் நான்காவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

உயிர் பிழைத்தவர்களை மீட்பதற்கான தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர