9 வயது சிறுமியிடம் பாலியல் சேட்டை புரிந்த 83 வயது நபர் கைது
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 9 வயது சிறுமியிடம் பாலியல் சேட்டைபுரிந்த 83 வயதுடைய சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நடந்ததை பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் அவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
இதனையடுத்து குறித்த முதியவரை புதன்கிழமை (04) மாலை அவரது வீட்டில் வைத்து கைது செய்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.
அத்துடன், சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.