குளவி கொட்டுக்கு இலக்கான 26 பேர் வைத்தியசாலையில் அனுமதி

குளவிக் கொட்டுக்கு இலக்கான அனைவரும் லுணுவில பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒக்டோபர் 3, 2023 - 00:55
குளவி கொட்டுக்கு இலக்கான 26 பேர் வைத்தியசாலையில் அனுமதி

வென்னப்புவ பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் அதிபர் உள்ளிட்ட 26 பேர் இன்று (02) பிற்பகல் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குளவிக் கொட்டுக்கு இலக்கான அனைவரும் லுணுவில பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குளவிக் கொட்டுக்கு இலக்கானவர்களில் அதிபர், நான்கு ஆசிரியர்கள் மற்றும் 21 மாணவர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிபர்,  இரண்டு ஆசிரியர்கள் மற்றும் நான்கு மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக  லுணுவில வைத்தியசாலையிலிருந்து, மாரவில தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பாடசாலைக்கு அருகில் உள்ள தோட்டத்தில் இருக்கும் குளவிக் கூட்டில் இருந்து கலைந்து வந்த குளவிகளே இவ்வாறு அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மீது கொட்டியுள்ளன.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!