யாத்ரீகர்களுடன் சென்ற பஸ் தீப்பிடித்து விபத்து... 20 பேர் பலி

விபத்தில், பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் முழு விபரம் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

மார்ச் 28, 2023 - 17:13
யாத்ரீகர்களுடன் சென்ற பஸ் தீப்பிடித்து விபத்து... 20 பேர் பலி

சவுதி அரேபியாவிலுள்ள மக்காவிற்கு யாத்ரீகர்களுடன் சென்ற பஸ் ஆசிர் பகுதியில் பாலத்தில் மோதி தீப்பிடித்த விபத்தில் 20 பேர் உயிரிழந்த நிலையில், 29 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புனித நகரங்களான மெக்கா மற்றும் மதீனாவிற்கு பல நாடுகளைச் சேர்ந்த யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பஸ்  தெற்கு மாகாணமான ஆசிரில் சென்ற போது பிரேக் பெயிலியரால் விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.

விபத்தில், பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் முழு விபரம் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!