டி20யில் இருந்து ஓய்வை அறிவித்தார் விராட் கோலி
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி சர்வதேச டி20 போட்டிகளில் ஓய்வு அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி சர்வதேச டி20 போட்டிகளில் ஓய்வு அறிவித்துள்ளார்.
உலக கோப்பை 2024 டி20 தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி அபார வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
அதிரடியாக விளையாடிய விராட் கோலி 59 பந்துக்கு 76 ரன்கள் எடுத்திருந்தார்.
தற்போது, சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக தற்போது அறிவித்துள்ளார்.
இறுதி போட்டி முடிந்த பிறகு பேசிய விராட் கோலி இதுதான் என்னுடைய கடைசி டி20 உலக கோப்பை என அறிவித்தார்.