இலங்கை கிரிக்கெட் தொடர்பில் ஐ.சி.சியின் கட்டுப்பாடுகளில் தளர்வு: புதிய அறிவிப்பு வெளியானது

அஹமதாபாத்தில் இன்று(21) நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 22, 2023 - 00:24
இலங்கை கிரிக்கெட் தொடர்பில் ஐ.சி.சியின் கட்டுப்பாடுகளில் தளர்வு: புதிய அறிவிப்பு வெளியானது

சர்வதேச கிரிக்கெட் பேரவையால் இலங்கை கிரிக்கெட் இடைநிறுத்தப்பட்டாலும் இருதரப்பு கிரிக்கெட் மற்றும் ஐ.சி.சி போட்டிகளில் இலங்கை தொடர்ந்து சர்வதேச அளவில் போட்டியிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அஹமதாபாத்தில் இன்று(21) நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு கடும் நிபந்தனைகளுடனேயே நிதியுதவி வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2024ஆம் ஆண்டு இலங்கையில் நடத்தப்படவிருந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி தென்னாபிரிக்காவுக்கும் மாற்றப்பட்டுள்ளதாகவும் ஐ.சி.சி அறிவித்துள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!