எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஜுலை 31, 2024 - 15:10
எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் பிரகாரம், இன்று (31) நள்ளிரவு முதல் எரிபொருளின் விலை குறைக்கப்படும் என நினைத்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருளை ஆர்டர் செய்யாத நிலையொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலைமை தொடர்பில் அவதானம் செலுத்தியதன் பின்னர் எரிபொருள் விலை இன்று திருத்தப்படாது என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!