மீண்டும் பேச்சுவார்த்தைக்கு தயார்; ஆனால் மூன்று நிபந்தனை: ஈரான் அதிபர் அதிரடி

அதற்காக மூன்று முக்கியமான நிபந்தனைகள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். முதலில், ஈரானின் இறையாண்மை மற்றும் அதன் உரிமைகள் முழுமையாக மதிக்கப்பட வேண்டும்.

மீண்டும் பேச்சுவார்த்தைக்கு தயார்; ஆனால் மூன்று நிபந்தனை: ஈரான் அதிபர் அதிரடி
ADVERTISEMENT
ADVERTISEMENT

ஈரான் அதிபர் மசூத் பெசேஷ்கியான், ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் தலைவர்களுடன் கடந்த இரண்டு நாட்களில் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தைகளின் போது, ஈரான் மீண்டும் அமைதி பேச்சுவார்த்தைகளுக்கு திரும்ப தயாராக இருக்கலாம் என அவர் சுட்டிக்காட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், அதற்காக மூன்று முக்கியமான நிபந்தனைகள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். முதலில், ஈரானின் இறையாண்மை மற்றும் அதன் உரிமைகள் முழுமையாக மதிக்கப்பட வேண்டும். இரண்டாவது, சமீபத்திய தாக்குதல்களால் நாட்டில் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். மூன்றாவது, எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்கள் மீண்டும் நடைபெறாத வகையில் உறுதியான உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் என்பதாக அந்த நிபந்தனைகள் கூறப்படுகின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த நிபந்தனைகளுக்கு எதிர்ப்புற நாடுகள் எப்படி பதிலளிக்கின்றன என்பதை ஈரான் காத்திருக்கிறது. இருப்பினும், கடந்த கால அனுபவங்களால் அந்த நாடுகளின் மீது முழு நம்பிக்கை இல்லை என்பதையும் ஈரான் தரப்பு பலமுறை தெரிவித்துள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT