இந்தியா–பாகிஸ்தான் மோதல்: கொழும்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு
கொழும்பில் இன்று மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை அச்சம் காரணமாக ஆடுகளம் தற்போது மூடப்பட்ட நிலையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. அதன் பகுதியாக, இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று நடைபெறும் 27வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இந்தப் போட்டி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்த உயர்மட்ட போட்டியை முன்னிட்டு கொழும்பு நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், நுழைவாயில்களில் கடுமையான சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் ரசிகர்கள் போட்டி தொடங்கும் நேரத்துக்கு குறைந்தது 4 மணி நேரத்திற்கு முன்பே மைதானத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கொழும்பில் இன்று மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை அச்சம் காரணமாக ஆடுகளம் தற்போது மூடப்பட்ட நிலையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.