ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து வலுவான எதிர்க்கட்சியை உருவாக்குவது காலத்தின் தேவை என ஐ.தே.க தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் அவர் கூறினார்.
நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை சம்பவத்தில் பொறுப்பை நிறைவேற்றத் தவறியதாகக் கூறி, இலங்கை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எம்பிக்கள் இன்று நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் கையெழுத்திட்டனர்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் கொழும்பில் இரகசிய சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர். நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாக முக்கிய கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், இது நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை நேரடியாகப் பாதிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அனைத்து மக்களின் இதயங்களிலும் அமைதியையும் நம்பிக்கையையும் வளர்ப்பதே ஹஜ் யாத்திரையின் பிரதான நோக்கமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள், மின்சாரக் கட்டணங்களைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவதோடு, தேர்தல் வாக்குறுதியின்படி 12 இலட்சம் ரூபாவில் விட்ஸ் கார் வாங்கும் கனவை நனவாக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திற்குச் சவால் விடுத்துள்ளார்.
தரமற்ற நிலக்கரியைப் பயன்படுத்தி மின் உற்பத்தியைக் குறைப்பதன் மூலம் எரிபொருள் மாஃபியாவுக்கு அரசாங்கம் வழிவகுப்பதாகவும், ஈரானின் சலுகை விலை எரிபொருளைப் புறக்கணிப்பது ஏன் என்றும் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.
எரிபொருள் விலை உயர்வை நியாயப்படுத்த அரசாங்கம் தவறான காரணங்களை முன்வைத்துள்ளதாகவும், எண்ணெய் விலை சில மணிநேரங்களுக்குள் மீண்டும் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் சிறப்பு அறிக்கை ஒன்றை இன்று ( 05) வெளியிட்ட சஜித் பிரேமதாச, அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட டார்பிடோவால் ஈரானிய போர்க்கப்பல் மீது நேற்று (04) நடந்ததாக கூறப்படும் தாக்குதல் குறித்து அரசாங்கம் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என்றும் கோரினார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் நேற்று (2) இரவு சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உரையாற்றிய பின்னர் கூடியிருந்த மக்கள் வெளியேறியதால் சிறிது நேரத்திலேயே கூட்டம் முடிவுக்கு வந்தது.
இயேசு கிறிஸ்து மரணத்தை வென்று உயிர்த்தெழுந்ததை நினைவுகூரும் வகையில், உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களைப் போலவே, நமது நாட்டிலுள்ள கிறிஸ்தவர்களும் ஈஸ்டர் தினத்தை உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனர்.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ், வாழ்க்கைச் செலவு மட்டுமே அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
வழமையாக ஆட்சிக்கு வந்த பின்னர் டீல் போடுவதும், திருடர்கள், மோசடிக்காரர்களை கையாள்வதும்தான் நடப்பதாகவும், அரசியல்வாதிகள் திருடர்கள், கொள்ளையர்களுடன் கையாளும் நடவடிக்கைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.