கொட்டாஞ்சேனையில் கத்திக்குத்து சம்பவம்: 53 வயது நபர் உயிரிழப்பு
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸ் மேற்கொண்டு வருகின்றனர்.
கொட்டாஞ்சேனை 6ஆம் ஒழுங்கையில் நேற்று (18) இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் 53 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார் என கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ நேரத்தில் குறித்த நபர் கடையொன்றின் முன்பாக நின்று கொண்டிருந்தபோது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. காயமடைந்த நிலையில், அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸ் மேற்கொண்டு வருகின்றனர்.