குடும்பத்தைக் காப்பாற்ற கடலில் 4 மணி நேரம் நீந்திய சிறுவன் – தாய், இரு சகோதரர்களின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டன
ஆரம்பத்தில் உயிர்க்காப்பு உடையை அணிந்து இரண்டு மணி நேரம் நீந்திய அவர், அது தனது வேகத்தை குறைக்கிறது என்பதை உணர்ந்து அதை கழற்றினார்.
ஆஸ்திரேலியாவில் தனது குடும்பத்தினரை காப்பாற்றுவதற்காக கடலில் தொடர்ந்து நான்கு மணி நேரம் நீந்திய 13 வயது சிறுவனின் துணிச்சல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவின் பிரபல சுற்றுலா நகரமான குவிண்டலப்பில் இந்த சம்பவம் இடம்பெற்றது.
சிறுவன் தனது தாய் மற்றும் இரு இளைய சகோதரர்களுடன் கடலில் இருந்தபோது, அவர்கள் திடீரென கடல்சறுக்கு நீரோட்டத்தால் உள்ளே அடித்துச் செல்லப்பட்டனர். இந்த ஆபத்தான நிலையை உணர்ந்த சிறுவன், குடும்பத்தினரை காப்பாற்ற உதவி பெற தீர்மானித்தார்.
அதன்படி, சுமார் நான்கு கிலோமீட்டர் தூரத்தை அவர் நான்கு மணி நேரம் தொடர்ந்து நீந்தி கடந்து உதவி கேட்கச் சென்றார். ஆரம்பத்தில் உயிர்க்காப்பு உடையை அணிந்து இரண்டு மணி நேரம் நீந்திய அவர், அது தனது வேகத்தை குறைக்கிறது என்பதை உணர்ந்து அதை கழற்றினார். பின்னர் மேலும் இரண்டு மணி நேரம் விடாமுயற்சியுடன் நீந்தி உதவியை நாடினார்.
சிறுவனின் தைரியம் மற்றும் உறுதியான மனநிலை காரணமாக அவரது தாய் மற்றும் இரு சகோதரர்களின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டன.