மழைவீழ்ச்சி கணிப்புகள் குறித்துப் பேசிய பெர்னாண்டோ, ஓகஸ்ட் மாதத்தில் நாட்டின் பல பகுதிகளில் வழக்கத்தை விடக் குறைவான மழைவீழ்ச்சியே எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறினார்.
எல் நினோவினால் ஏற்படும் தீவிர வானிலை மாற்றங்களால் ஆபத்தில் உள்ள நாடுகளில் வசிக்கும் பல கோடி மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை சந்திக்க நேரிடும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
சக்திவாய்ந்த எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக, உலகின் பாதிக்கப்படக்கூடிய பிராந்தியங்களில் அடுத்த ஆண்டுக்குள் கிட்டத்தட்ட 49 மில்லியன் மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்ளக்கூடும் என உலக உணவுத் திட்டம் (WFP) எச்சரித்துள்ளது.
ஜூலை முதல் செப்டம்பர் வரை எல் நினோ காலநிலை நிகழ்வு தீவிரமடையலாம் என உலக வானிலை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் இலங்கையில் வெப்பநிலை உயர்வு, வறட்சி, விவசாய பாதிப்பு மற்றும் நீர்மின் உற்பத்தி குறைவு ஏற்படும் அபாயம் உள்ளது.
எல் நினோ காலநிலை மாற்றத்தால் ஏற்படும் கடும் மழை மற்றும் வெள்ள அபாயத்தை எதிர்கொண்டு, பெரு நாட்டின் 40% மாவட்டங்களில் அரசு 60 நாட்கள் அவசர நிலை பிரகடனம் செய்துள்ளது.
எல் நினோ காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வறட்சி மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்களின் பாதிப்புகளைக் குறைக்கும் நோக்கில், தேசிய மட்டச் செயற்பாட்டுத் திட்டத்தை அமுல்படுத்துவதற்காக விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
எல் நினோ வானிலை முறை வருகிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ள ஐக்கிய நாடுகளின் வானிலை அமைப்பு, உலக நாடுகள் உச்ச கட்ட வானிலை மாற்றங்களுக்குத் தயாராகுமாறு எச்சரித்துள்ளது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் பூமியின் வெப்பநிலை சர்வதேச காலநிலை வரம்பை மீண்டும் மீண்டும் தாண்டும் என்றும், 2024-இல் பதிவான வெப்பமான ஆண்டை விட 2027 அதிக வெப்பமாக இருக்கும் என்றும் உலக வானிலை அமைப்பின் புதிய கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.