அரச நிறுவனங்கள் இன்று முதல் வழமைக்கு: பாடசாலைகள் ஏப்ரல் 20 முதல் திறப்பு
சித்திரை புத்தாண்டு விடுமுறைக்குப் பின்னர் அரச நிறுவனங்கள் இன்று முதல் மீண்டும் வழமையான பணிகளை ஆரம்பித்துள்ளன.
அதன்படி, இன்று முதல் வரும் 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை அனைத்து அரச நிறுவனங்களும் வழக்கம்போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்களுக்கு தேவையான சேவைகள் தடையின்றி வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக முக்கிய அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வரும் ஏப்ரல் 20ஆம் திகதி முதல் நாடு முழுவதும் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படவுள்ளன.
இந்த கல்வி தவணை ஜூலை 24ஆம் திகதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு அனைத்து அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் பொருந்தும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
