பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

நாட்டில் உள்ள முஸ்லிம் பாடசாலைகள் நாளை (17) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

நாட்டில் உள்ள முஸ்லிம் பாடசாலைகள் நாளை (17) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

2024 ஆம் கல்வி ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதற்கட்ட கல்வி நடவடிக்கைகள் நிறைவடைந்து கடந்த 10 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டது.

இதையடுத்து, சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 24ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டது.

அத்துடன், முஸ்லிம் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர