விபத்துகளில் இரண்டு பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு

நாட்டின் பல பகுதிகளில் நேற்று (06) நடந்த விபத்துகளில் இரண்டு பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Jan 7, 2024 - 09:51
விபத்துகளில் இரண்டு பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு

நாட்டின் பல பகுதிகளில் நேற்று (06) நடந்த விபத்துகளில் இரண்டு பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எல்பிட்டிய - அம்பலாங்கொட வீதியில் 09 ஆவது மைல்கல் அருகில் மோட்டார் சைக்கிள், கெப் வண்டியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மற்றும் பின்னால் சென்ற இருவரும் காயமடைந்து எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

பத்தேகம பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய ஆணும் 38 வயதுடைய பெண்ணும் உயிரிழந்துள்ளனர். கெப் வண்டியின் சாரதி தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, கொழும்பு - நீர்கொழும்பு வீதியின் துடெல்ல பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று கெப் வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஜாஎல பிரதேசத்தில் வசிக்கும் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர்.

48 வயதுடைய ஆணும் 46 வயதுடைய பெண்ணும் உயிரிழந்துள்ளனர். விபத்து தொடர்பில் கெப் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஜாஎல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, கிரானேகம, வட்டகல சந்தியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 31 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.