யுவதிகளை ஹோட்டலுக்கு அழைத்த போலி வைத்தியர்... எச்சரிக்கை செய்தி!

யுவதிகள் 15 பேர், செய்த முறைப்பாட்டு அமையவே போலி வைத்தியர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
யுவதிகளை ஹோட்டலுக்கு அழைத்த போலி வைத்தியர்... எச்சரிக்கை செய்தி!
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மாடலிங் துறையில் இணைத்துக்கொள்வதாக தெரிவித்து முகப்புத்தகத்தில் விளம்பரம் செய்து இளம் யுவதிகளை ஹோட்டலுக்கு அழைத்த கண்டி ரஜவெல்லையைச் சேர்ந்த போலி வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யுவதிகள் 15 பேர், செய்த முறைப்பாட்டு அமையவே போலி வைத்தியர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

பேஸ்புக்கில் விளம்பரம் செய்த சந்தேகநபர், மாடலிங் துறையில் யுவதிகளை இணைத்துக்கொள்வதாக, அவர்களின் புகைப்படங்களை பெற்று வீடியோவும் எடுத்து, தேர்ந்தெடுக்கப்பட்ட யுவதிகளை தனித்தனியாக நேர்முகத் தேர்வுக்கு அழைத்துள்ளார்.

வைத்தியர் போல தன்னை இனங்காட்டிக்கொண்ட சந்தேக நபர், யுவதிகளின் நிர்வாண புகைப்படங்களை பெற்று அவர்களை அச்சுறுத்தி, பல்வேறான துன்புறுத்தலுக்கு உட்படுத்தியுள்ளார் என்பது விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, இவ்வாறான போலியான நபர்களின் விளம்பரங்களை கண்டு ஏமாறாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
Click for more latest மலையகம் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -