தற்காலிகமாக மூடப்பட்ட தூதரகங்களை மீளத் திறப்பதற்கு அமைச்சரவை அனுமதி
2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகள் காலப்பகுதியில் தற்காலிகமாக மூடப்பட்ட இலங்கைத் தூதரகங்களை மீண்டும் திறப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி தூதரகங்களை மீளத் திறப்பது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, சைப்பிரஸ் மற்றும் நிக்கோசியாவில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம், ஈராக் மற்றும் பாக்தாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் ஜேர்மனியின் பிராங்பேர்ட்டில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகம் ஆகியவற்றை மீண்டும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.