கிராண்ட்பாஸ் கொலை தொடர்பாக 8 சந்தேக நபர்கள் கைது
கிராண்ட்பாஸ் பகுதியில் கொலை சம்பவம் தொடர்பில் எட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிராண்ட்பாஸ் பகுதியில் அண்மையில் இரண்டு இளைஞர்கள் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டிருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பிலேயே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.