எரிபொருள் விலை உயர்வை நியாயப்படுத்த அரசாங்கம் தவறான காரணங்களை முன்வைத்துள்ளதாகவும், எண்ணெய் விலை சில மணிநேரங்களுக்குள் மீண்டும் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாளாந்த நாணய மாற்று வீத அட்டவணையின் படி, இன்று ஒரு அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூ. 306.28 ஆகவும், விற்பனை விலை ரூ. 313.81 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவின் கேப்பாபுலவில் இராணுவத்தால் நடத்தப்படும் சிகையலங்கார நிலையத்தை மூடுமாறு கரைத்துறைப்பற்று பிரதேச சபை அறிவித்துள்ளது. உள்ளூர்வாசிகளின் முறைப்பாட்டை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் இந்த செயலை பிரதேச சபை தவிசாளர் வன்மையாக கண்டித்துள்ளார்.
தங்கம் ஒரு அவுன்ஸின் விலை $4,000ஐ தாண்டி நேற்று வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது. அமெரிக்க அரசாங்க முடக்கம் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற நிலையே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான புகலிடங்களைத் தேடக் காரணம்.
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துகள் 2025 செப்டம்பர் மாத இறுதியில் $6.24 பில்லியனாக உயர்ந்துள்ளன. மத்திய வங்கியின் சமீபத்திய தரவுகள் 1.1% அதிகரிப்பைக் காட்டுகின்றன.
நாட்டில் நிலவும் பணவீக்கத்தை 5 சதவீதமாக இந்த வருடத்தில் பேண எதிர்பார்ப்பதாக மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.