இந்த மாதத்தில் வரவுள்ள எரிபொருள் கப்பல்கள் மூலம் இலங்கைக்கு தேவையான கையிருப்பு ஏப்ரல் இறுதி வரை போதுமானதாக இருக்கும் என கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. மார்ச் மாதம் முழுவதும் பல நாடுகளில் இருந்து டீசல் மற்றும் பெட்ரோல் கப்பல்கள் வரவுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து குஜராத்திற்கு சென்ற சரக்கு கப்பல் மீது ஹார்மூஸ் ஜலசந்தி அருகே தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.
நாட்டில் தற்போது எரிபொருள் விநியோகம் வழமையான முறையில் நடைபெற்று வருவதாகவும், எந்தவிதத் தடையும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
பெரும்பாலும் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் கொரியா போன்ற நாடுகளிலிருந்து பெறப்படுவதாகவும், கப்பல் கட்டணம் மற்றும் தூரம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் பிரதான ஆதாரமாக இல்லை என்றும் அவர் விளக்கினார்.
மின்சார விநியோகம் மற்றும் எரிபொருள் விநியோகம் உள்ளிட்டவை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் 50% எரிபொருள் இருப்புக்களை வைத்திருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
ஏனைய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்காக வரிசைகளில் காத்திருப்பதைத் தவிர்க்குமாறும் அவர் பொதுமக்களிடம் கோரியுள்ளார்.