சக்திவாய்ந்த எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக, உலகின் பாதிக்கப்படக்கூடிய பிராந்தியங்களில் அடுத்த ஆண்டுக்குள் கிட்டத்தட்ட 49 மில்லியன் மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்ளக்கூடும் என உலக உணவுத் திட்டம் (WFP) எச்சரித்துள்ளது.
மகாவலி கங்கையை ஒட்டிய உடுநுவர, உடபலாத, யடிநுவர, கங்கஇஹல கோரள, பஸ்பாகே கோரள மற்றும் கங்கவட கோரள ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பசிபிக் கடல் வெப்பநிலை உயர்வால் எல்-நினோ நிலை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இது உலகளாவிய வெப்ப அலை, வறட்சி, வெள்ளம் மற்றும் கடுமையான காலநிலை மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட பகுதிகளுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் கொழும்பு, கம்பஹா உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. அடுத்த சில மணித்தியாலங்களில் மேல், சபரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் காலி மாவட்டத்தில் 200 மிமீக்கும் அதிக மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.
பிரித்தானியாவின் தெற்கு வேல்ஸ் உள்ளிட்ட சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக பிரித்தானிய வானிலை முன்னறிவிப்பு நிறுவனமான Met Office தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே வெள்ளத்தில் மூழ்கியுள்ள வீதிகள் மிகவும் பாதிக்கப்படக்கூடியதாகவும், கடப்பதற்கு ஆபத்தானதாகவும் மாறக்கூடும்.