சேனக்க பல்லேதென்ன சிறைச்சாலைகள் திணைக்களத்தில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ள அனுபவம் கொண்ட அதிகாரி ஆவார்.
கலவரத்தின் காரணமாக சிறைச்சாலையின் பல கட்டடங்கள், உபகரணங்கள் மற்றும் அரச சொத்துகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக சிறைச்சாலையின் சொத்துகளுக்குப் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
"எங்கள் பிள்ளைகளைக் கொல்ல இடமளிக்க வேண்டாம்" என அவர்கள் பாதுகாப்புப் படையினரிடம் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்ததால் அந்த இடத்தில் நெகிழ்ச்சியான சூழல் நிலவியது.
தற்போது சிறைச்சாலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரை ராகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு இந்த பொலிஸ் ஊடரங்கு சட்டம் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த தெரிவித்துள்ளார்.
மோதலைத் தொடர்ந்து சிறைச்சாலையில் உள்ள கட்டடம் ஒன்றில் தீ பரவியுள்ளதுடன், இதில் கைதிகள் உட்பட பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சூழலை மதிப்பீடு செய்யவும் மற்றும் நிலைமையைக் கையாளவும் பொலிஸ் விசேட அதிரடிப்படை சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளன.