ஹம்பாந்தோட்டையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் உயிரிழப்பு
ஹம்பாந்தோட்டை சூச்சி கிராமத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.
சம்பவத்தில் 38 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.