பெலியத்த துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் உயிரிழப்பு

உயிரிழந்தவரின் சடலம் தங்காலை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பெலியத்த துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் உயிரிழப்பு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பெலியத்த நுழைவாயிலுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மற்றொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த துப்பாக்கிச் சூடு இன்று காலை 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பிராடோ ரக காரில் வந்தவர்கள் டிஃபென்டர் ஜீப்பில் சென்றவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பாதாள உலகக் குற்றவாளியான கொஸ்கொட சுஜீயின் கும்பலே இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர