களுதாவளைக் கடலில் கரை ஒதுங்கிய மர்மப்பொருள்
மட்டக்களப்பு, களுதாவளைக் கடற்கரையில் மர்மப் பொருள் ஒன்று இன்று (17) கரை ஒதுங்கியுள்ளது.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
மட்டக்களப்பு, களுதாவளைக் கடற்கரையில் மர்மப் பொருள் ஒன்று இன்று (17) கரை ஒதுங்கியுள்ளது.
அதிகாலையில் கடற்கரைக்குச் சென்ற மீனவர்கள், மர்மப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதை அவதானித்து, பின்னர் அதனைக் கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
இரும்பு உலோகத்தில் செய்யப்பட்டு, இளம் நீலக் கலரில் கூம்பக வடிவில் காணப்படும் இப்பொருளின் அடியில் 12 LM எனும் எழுத்துக்களும் காணப்படுகின்றன.

மேற்பகுதியில் சிறியளவு வலைமுடிச்சு, டயர்களும் உள்ள நிலையில், இது பெரிய கப்பல்களின் ஒரு பாகமாக இருக்கலாம் என அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
அத்துடன், மர்மப் பொருள் கரை ஒதுங்கியுள்ளமை தொடர்பில் கடற்படைக்கு அறிவித்துள்ளதாகவும் மீனவர்கள் கூறியுள்ளனர்.
Click for more latest
இலங்கை news.
Also get top headlines and
latest news
from Sri Lanka and around the
world
at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -