இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம் குறித்து வெளியான அறிவிப்பு

வருடத்தின் தொடக்கத்தில் இருந்து இலங்கை ரூபாய் அமெரிக்க டொலருக்கு எதிராக சுமார் 19% குறிப்பிடத்தக்க உயர்வை சந்தித்துள்ளது.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம் குறித்து வெளியான அறிவிப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

300 அத்தியாவசிய பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் விரைவில் நீக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். 

எனினும், இறக்குமதி தளர்வுகள் குறித்த சரியான விவரங்கள் மற்றும் காலக்கெடு இன்னும் அறிவிக்கப்படவில்லை.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அண்மையில், எதிர்காலத்தில் கூடுதல் இறக்குமதி தளர்வுகள் எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கி அறிவித்திருந்தது.

வருடத்தின் தொடக்கத்தில் இருந்து இலங்கை ரூபாய் அமெரிக்க டொலருக்கு எதிராக சுமார் 19% குறிப்பிடத்தக்க உயர்வை சந்தித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் சில பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை 09 ஜூன் 2023 முதல் தளர்த்தியது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

எனினும், தற்போதுள்ள பொருளாதார நிலைமைகளின் கீழ் வாகன இறக்குமதியை அனுமதிக்க முடியாது என்றும், நாட்டின் நிலைமையை கவனமாக ஆராய்ந்த பிறகே வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் முன்னதாக தெரிவித்திருந்தார்.

Click for more latest சமூகம் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -