அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம்
225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இனிமேல் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான உரிமம் வழங்கப்பட மாட்டாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்றிரவு (20) தெரண தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 360 நேர நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறைக்கப்பட்டமை தொடர்பிலும் அமைச்சர் விஜித ஹேரத் அதன்போது கருத்து வெளியிட்டார்.
