ஐந்து பேர் படுகொலை; மற்றுமொரு சந்தேக நபர் கைது
பெலியத்தையில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜனவரி 22 ஆம் திகதி ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், சட்டத்தரணி ஊடாக பெலியத்த பொலிஸாரிடம் நேற்று (06) ஆஜராகிய நபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இம்புல்கொட அக்குரஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.