கொழும்பு புறநகர் பகுதியில் துப்பாக்கிச் சூடு
கொழும்பு, தொட்டலங்க பகுதியில் இன்று (31) துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சமபவத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.