அதிகாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு
அம்பலாங்கொட, மீட்டியகொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (28) அதிகாலை 5.45 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.