இந்தச் சம்பவம், ஏற்கெனவே பதற்றம் நிலவி வரும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மேலும் கவலையை ஏற்படுத்தியுள்ளதுடன், உலகளாவிய எண்ணெய் போக்குவரத்து பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் அதிகரித்துள்ளது.
ஈரானின் இந்த நடவடிக்கைகள் ஒரு தவறான முடிவு என்றும், இதற்காக அந்த நாடு விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) எச்சரித்துள்ளார்.
அமெரிக்க பொருளாதாரத் தடைகள் மற்றும் துறைமுக முற்றுகைகள் காரணமாக கடுமையான நெருக்கடியை எதிர்கொண்ட ஈரானின் பொருளாதாரத்திற்கு இந்த ஒப்பந்தம் புதிய உயிரூட்டலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக எரிசக்தி விநியோகத்தில் முக்கிய இடம் வகிக்கும் இந்த நீரிணை முடங்கியதால், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
கடந்த ஒரு மாத போரில் மின் நிலையங்கள், பாலங்கள் எனப் பெரும் உட்கட்டமைப்பு சேதங்களை ஈரான் சந்தித்துள்ள நிலையில், அடுத்த இரண்டு வாரங்கள் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான களமாக அமைய வேண்டும்.