முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு தலைவர் சுரேஷ் சலே, சட்ட ஆலோசகரின் அறிவுரையை ஏற்று தனது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே எதிர்நோக்கியுள்ள மனிதநேயப் பிரச்சினைகளில் தலையிடுமாறு கோரி, அவரது குடும்ப உறவினர்கள் இன்று திருத்தந்தை லியோ பாப்பரசருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.