நாடளாவிய ரீதியில் மரக்கறிகளின் விலை திடீரென அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேலியகொடை - மெனிங் சந்தையில் ஒரு கிலோகிராம் போஞ்சியின் விலை 600 ரூபாயாகவும் ஒரு கிலோகிராம் கரட் 400 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சந்தைகளில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.
மரக்கறிகளின் விலை இன்று (27) குறைவடைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்தும் அதிகரித்து வரும் மழையின் காரணமாக குறித்த மரக்கறிகள் அழுகிப் போவதற்கான ஆபத்து உள்ளதாக, இப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
கிறிஸ்மஸ் காலத்தில் சந்தைக்கு மரக்கறிகளை விநியோகிக்க முடியாத நிலையில் உள்ளுர் சந்தையில் மரக்கறிகளின் விலை தொடர்ந்தும் உயரும் என்றும் அவர் தெரிவித்தார்.