மகாவலி கங்கையை ஒட்டிய உடுநுவர, உடபலாத, யடிநுவர, கங்கஇஹல கோரள, பஸ்பாகே கோரள மற்றும் கங்கவட கோரள ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட பகுதிகளுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கின்னியா, மூதூர், கந்தளாய், சேருவில, வெலிக்கந்தை, லங்காபுர, தமன்கடுவை, திம்புலாகலை உள்ளிட்ட பிரதேச செயலகங்களின் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
களுகங்கை மற்றும் மல்வத்து ஓயா உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர்மட்டங்களும் தற்போது குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.