பாதாள உலகத் தலைவன் 'கெஹெல்பத்தர பத்மே'வின் முக்கிய துப்பாக்கிதாரியான 'மாட்டியா' (போம்புவல தேவகே சுரங்க சஞ்சீவ கருணாரத்ன) மலேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் CID அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் பதுங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டார். இவருடன் மேலும் 5 பேர் சிக்கியுள்ளனர். திரைப்படப் பாணியில் நடந்த இக்கொலையின் பின்னணி மற்றும் கைது நடவடிக்கை குறித்த முழு விவரம்.