அரலகன்வில பிம்பொக்குன பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக கணவரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் 29 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்பத் தகராறு தீவிரமடைந்த நிலையில், கணவன் தனது மனைவியை தீ வைத்து கொன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
சம்பவத்தை அறிந்ததும் அங்கு வந்த 20 வயதுடைய மகன், தாய் மற்றும் சகோதரிகளை காப்பாற்ற முயன்ற போது, அவருக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.