உரிய தகுதியுடைய பயனாளிகள், நாளை (31) முதல் தங்களுக்கான முதியோர் கொடுப்பனவை அஸ்வெசும வங்கிக் கணக்குகள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்வெசும திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கான மே மாத கொடுப்பனவுகள் நாளை முதல் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.