தென்மேற்கு பருவமழை நிலைகொள்ளும் நிலையில், மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மாகாணங்கள், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் அடுத்த சில நாட்களில் 75 மி.மீ.க்கு மேற்பட்ட பலத்த மழை எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 01 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பதிவாகலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.