பொலிஸ்மா அதிபருக்கு எதிரான அச்சுறுத்தல் கருத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட SLPP பொதுச்செயலாளர் சாகர காரியவசம், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். வாக்குமூலம் அளிப்பதற்காக ஆஜரானபோதே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவில், பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன இன்று(22) முன்னிலையாகி உள்ளார்.