தேவையான வசதிகள் வழங்கப்படாத நிலையில் இலவச சுகாதார சேவை பாதிக்கப்படின், அதற்கான முழுப் பொறுப்பையும் சுகாதார அமைச்சும், அமைச்சரும், அரசாங்கமும் ஏற்க வேண்டுமென இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த வைத்தியர் சமில் விஜேசிங்க வலியுறுத்தினார்.
இன்று காலை 08 மணி முதல் இந்தப் பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக GMOAவின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.
இன்று முதல் மாகாண கல்வி மற்றும் பிராந்திய கல்வி அலுவலகங்களால் பரிந்துரைக்கப்படும் செயலமர்வுகள் மற்றும் பயிற்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டோம் என்று அவர்கள் கூறுகின்றனர்.
மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களும் 50 நாட்களுக்கும் மேலாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.