மேல், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், வடமத்திய, சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இலங்கையின் களுத்துறை, கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் முதற்கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரம் பொதுமக்கள் அவதானமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த 08 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு, மூன்றாம் கட்டத்தின் கீழ் உடனடியாக வெளியேறுவதற்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் விஞ்ஞானி சுமிந்த ரத்நாயக்க தெரிவித்தார்.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை மட்டம் 3 (வெளியேறுங்கள் – சிவப்பு) அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.