இலங்கையில் இந்த ஆண்டில் டெங்கு பாதிப்பு 55,406 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு 32 ஆக அதிகரித்துள்ள நிலையில், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அதிக பாதிப்பு பதிவாகியுள்ளது.
டெங்கு நோயாளர்களில் பெரும்பாலானோர் கொழும்பு, கம்பஹா மற்றும் குருநாகல் மாவட்டங்களில் இருந்து பதிவாகியுள்ளனர். குறிப்பாக, மொத்த நோயாளர்களில் சுமார் 50 சதவீதம் பேர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.