மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்க ரஷ்யா உதவும் என அதிபர் புதின் உறுதியளித்துள்ளார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ஈரான் வெளியுறவுத் துறை மந்திரியைச் சந்தித்துப் பேசிய புதின், அமைதிக்கான முழு ஆதரவை வழங்குவதாகத் தெரிவித்தார்.
ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, சிறிய குழுவுடன் வெள்ளிக்கிழமை இரவு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் செல்கிறார். அமெரிக்காவுடனான நேரடிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான முக்கியப் படியாக இந்தப் பயணம் கருதப்படுகிறது.