மகாவலி கங்கையை ஒட்டிய உடுநுவர, உடபலாத, யடிநுவர, கங்கஇஹல கோரள, பஸ்பாகே கோரள மற்றும் கங்கவட கோரள ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட பகுதிகளுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அனர்த்த எச்சரிக்கையை கருத்தில்கொண்டே பதுளை மாவட்ட பாடசாலைகள் இன்று காலை 11 மணிக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.